திருஅண்ணாமலையார் கோயில் என்றும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் என்றும் அறியப்படும் தலம்.
சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாகும்.
இத்தலத்தின் மூலவர் அருணாசலேசுவர் என்றும்,அம்பிகை உண்ணாமுலையால் என்றும் அழைக்கப்படுகிறார்.
காசியில் இறந்தால் முக்தி, திருவாரூரில் பிறந்தால் முக்தி, சிதம்பரத்தில் வழிபட்டால் முக்தி ஆனால், திருவண்ணாமலை நினைத்தாலே முக்தி தரும் தலம் என்று கூறப்படுகிறது
அம்பிகையின் 51 சக்தி பீடங்களுள் இத்தலம் அருணை சக்தி பீடமாக போற்றப்படுகிறது
ஒரு சமயம் கயிலை மலையில் பார்வதிதேவியுடன், ஈசன் அமர்ந்திருந்தார்.அப்பொழுது ஈசனைக் காண வந்த பிருங்கி முனிவர் ஈசனை மட்டும் வணங்கி வலம் வந்தார். ஆனால்,தேவியை வணங்கவில்லை. அதனால் பார்வதி கோபமடைந்தாள். பிருங்கியின் உடலில் உள்ள சதை மற்றும் ரத்தம் நீங்கி சக்தியை இழக்குமாறு சாபமளித்தார்.பிருங்கி முனிவர் சதையும் ரத்தமும் நீங்கி எலும்பு தோல் போர்த்திய உடம்பினைப் பெற்றார்.
ஈசன் தம்முடைய பக்தனின் தளர்வடைந்த நிலையினைக் கண்டு இரக்கமுற்றார்.
உடனே முனிவருக்கு மூன்றாவது காலாக ஊன்று கோலினை அளித்தார். ஊன்று கோலினை பெற்ற முனிவர் மகிழ்ச்சி அடைந்து,ஈசனின் முன்பாக நடனம் ஆடி பக்தியைச் செலுத்தினார்.
இதனைக் கண்ட பார்வதிதேவி மனம் வருந்தி ஈசனில் பாதி உருவை அடையவேண்டும் என்று கருதி ஈசனை நோக்கிக் கடுமையான தவத்தினை மேற்கொண்டாள்.ஈசன் மனமகிழ்ந்து தம்முடலில் பாதியினைத் தருவதாக வரமளித்தார். பார்வதி தேவி சிவனுடன் ஒன்றிணைந்து அர்த்தநாரீஸ்வரராகக் காட்சி அளித்தார்
⚛பிருங்கி முனிவர் இருவரையும் வணங்க வேண்டிய நிலை ஏற்பட்டு வணங்கினார்.இவ்வாறு பார்வதி ஈசனின் பாதி உடலை பெற்ற தலம் இத்திருவண்ணாமலையாகும்⚛
கார்த்திகை தீபத்தின்போது அர்த்தநாரீஸ்வர திருக்கோலத்தின் ஆனந்த நடனத்தை ஓரிரு நிமிடங்கள் மட்டுமே தரிசிக்க முடியும்.
பின் அடுத்த வருட கார்த்திகை தீபத்தின்போதுதான் அத்திருவுரு தரிசிக்கக் கிடைக்கும்
✴உண்ணாமுலை அம்பிகையின் அழகை வர்ணிக்க வார்த்தைகள் ஏது? லலிதா ஸஹஸ்ர நாமம் தேவியைப் போற்றும் நாமங்களில் நிஸ்துலா – சிறந்த பொருள் அனைத்திலும் சிறந்தவள், எவர்க்கும் ஒப்பிலாதவள் என்கிறது.
✴மேலும் ஸமானாதிக வர்ஜிதா – ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவள். ஒப்பார் இல்லாத போது மிக்கார் எப்படி இருக்க முடியும்? தர்ம, அர்த்த, காம, மோக்ஷம் எனும் சதுர்விதபுருஷார்த்தங்களையும் அளிக்க வல்லவள்.
✴தேவியின் தாமரை போன்ற சிவந்த பாதங்களுக்கு அவற்றின் நகங்களின் பிரகாசமே நிலவாகிறதாம்! தாமரையின் கொழுப்பை அடக்கும் திருப்பாதங்கள் என்று மூககவியும் தன் ‘பாதாரவிந்த சதக’த்தில் அம்பிகையின் பாதங்களைப் புகழ்கிறார்.இதைத்தான் அருணகிரிநாதரும் ‘சரண கமலாலயத்தை அரை நிமிஷ நேர மட்டில் தவ முறை தியானம் வைக்க’ என்கிறார்.
✴சரணங்கள் என்ற கமலங்களாலேயே ஆன ஆலயம் தேவியின் திருப்பாதங்களாகும்.
✴தேவியின் கண்களோ அதற்கும் மேலான கருணையைப் பொழிகின்றது. மிகவும் குளிர்ந்ததான,அழகான, சலனமான பார்வையை அம்பிகை நம்மீது செலுத்த வேண்டும்.
✴அன்பு கனிந்த பார்வை என்பது குளிர்ச்சியாக இருக்கும் தேவியின் பார்வை. அதன் மகிமையாலேயே ஈசனால் சாம்பலாக்கப்பட்ட மன்மதன் மீண்டும் உயிர்பிழைக்கப் பெற்றான்.
✴அம்பிகையின் குழந்தை என்ற பெருமையையும் பெற்றான்.
✴தேவியின் கடைக்கண் பார்வை நம்மீது பட்டால் போதும்,யுகங்களில் செய்த பாவங்களும் பறந்தோடிவிடும்.