இந்த விரதமிருந்தால் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும் !!
இந்த விரதமிருந்தால் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும் !!
மனிதர்களாய் பிறந்த அனைவருக்கும் துன்பங்கள் வருவது இயல்பு. இந்த துன்பங்களை போக்கி இன்பங்கள் உண்டாக பிள்ளையாருக்கு எவ்விதமான விரதத்தை மேற்கொள்ள வேண்டும் எனப் பார்ப்போம்.
செவ்வாய் விரதம் :
ஆடி மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமை தொடங்கி, ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் என அடுத்த வருடத்தில் வரும் ஆடி மாதத்தின் செவ்வாய்க்கிழமை வரை விரதம் இருந்தால் செவ்வாய் தோஷம் விலகும்.
சதுர்த்தி விரதம் :
பிரதி மாதம் சதுர்த்தி அன்று விரதம் இருந்தால் காரியத்தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும்.
வைகாசி வளர்பிறை :
வைகாசி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை தொடங்கி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் என அடுத்த வருடத்தில் வரும் வைகாசி மாதத்தின் வெள்ளிக்கிழமை வரை விரதம் இருப்பது வெள்ளிக்கிழமை விரதமாகும். இந்த விரதத்தை கடைபிடித்தால் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் உண்டாகும்.
தூர்வா கணபதி விரதம் :
கார்த்திகை மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தியன்று விரதமிருந்து விநாயகரை அருகம்புல் ஆசனத்தில் அமர்த்தி பூஜை செய்தால் வம்சவிருத்தி ஏற்படும்.
செவ்வாய் பிள்ளையார் விரதம் :
ஆடி மாத செவ்வாய்க்கிழமையன்று விரதம் இருந்து பிள்ளையாரை வணங்குவது செவ்வாய் பிள்ளையார் விரதமாகும். இந்த விரதத்தில் ஆண்கள் கலந்து கொள்ளக்கூடாது.
இந்த விரத பூஜையைச் செய்யும் பெண்கள் வீட்டிலிருந்து பச்சரிசியைக் கொண்டு வந்து பொது இடத்தில் இடித்து மாவாக்கி, தேங்காய் துருவல் சேர்த்து உப்பின்றி கொழுக்கட்டை அடை செய்து பிள்ளையாருக்கு படைப்பார்கள். இந்த விரதத்தை மேற்கொள்வதால் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.
தூர்வாஷ்டமி விரதம் :
புரட்டாசி மாதத்தின் வளர்பிறை அஷ்டமியன்று விரதத்தை தொடங்கி ஒரு வருடம் விநாயகரை அருகம்புல்லால் அர்ச்சித்து வந்தால் ஆரோக்கிய குறைபாடுகள் நீங்கி உடல் வலிமை பெறும்.
குமாரசஷ்டி விரதம் :
கார்த்திகை மாத தேய்பிறை பிரதமை திதியன்று விரதத்தை தொடங்கி மார்கழி மாதத்தில் வரும் பிறை சஷ்டி வரை 21 தினங்கள் விரதத்தை மேற்கொள்வார்கள். மேலும், அச்சமயத்தில் 21 இழைகள் உடைய மஞ்சள் நூலை கையில் கட்டிக்கொள்வார்கள்.
புத்திர பாக்கியத்திற்காகவும், குடும்ப வளத்திற்காகவும் செய்யப்படுகின்ற இந்த விரத்திற்குப் பிள்ளையார் நோன்பு என்று பெயர்.
விநாயக நவராத்திரி :
ஆவணி வளர்பிறை சதுர்த்தியை தொடர்ந்து ஒன்பது நாட்கள் செய்வது விநாயக நவராத்திரி விரதமாகும்.
அங்காரக சதுர்த்தி விரதபூஜை :
பணக்கஷ்டத்தில் உள்ளவர்கள் மாசி மாதத்தின் தேய்பிறை செவ்வாய்க்கிழமையில் தொடங்கி ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் என ஒரு வருடம் விரதமிருந்து பூஜை செய்து வந்தால் பெரும் பணக்காரரர்களாக ஆவார்கள் என்பது நம்பிக்கையாகும்.
வெள்ளிப்பிள்ளையார் விரதம் :
ஆடி, தை வெள்ளிக்கிழமைகளில் விநாயகருக்கு விரதம் இருந்து நம் வேண்டுதல்களுக்கு ஏற்ப துதிகள் பாடி பலகார பட்சனங்கள் படைத்து விநாயகரை வணங்க வேண்டும். இந்த விரதத்தை மேற்கொண்டால் நினைத்த காரியங்கள் கைகூடும்.