Pages

ஹோரை பலன்: 

கிரகங்களுக்கும், மனிதனுக்கும் உள்ள தொடர்பு:

1. மனிதன் காலத்தை சார்ந்தே அவனதுஒவ்வொரு நொடிப்பொழுதும் கழிகிறது!
2. அவனது ஒவ்வொரு இயக்கங்களும், நிகழ்வுகளும் ஹோரா கிரகத்தின்தன்மையை பிரதிபலிபபதாகஇருக்கிறது.
3. ஹோரா கிரகத்தின் "குணங்கள், செயல்பாடுகள்" என்னவோ? அதுவேஅந்த 1 மணி நேர ஹோரையில்வெளிப்பட்டு விளங்குகிறது!
4. மனிதனது மனநிலைகளுக்கும், சூழ்நிலைகளின் தன்மைகளுக்கும், ஹோரா கிரகங்களுக்கும் தொடர்புஇருக்கிறது!
5. ஹோரா கிரகமும், வார கிரகமும்இணைந்தே நிகழ்வுகளை, சம்பவங்களை(Events) தோற்றுவிக்கின்றன!!
6. ஹோரா கிரகத்தின் காரகநிகழ்வுகளை தவிர்த்து பிரிதொன்றும்அந்த ஹோரை முடியும் வரை நிகழவேநிகழாது!
7. கோள்களின் கதிர் அலைகள்காற்றினில் கலந்து மனிதனது, மூச்சுக்காற்றாகிய சுவாசத்தின் மூலம்மனிதனை தொடர்பு கொள்கிறது!
மனிதனை இயக்குவது சுவாசிக்கும்காற்று
1. காற்றினை சுவாசிக்கின்ற எந்த ஒருமனிதனும் கோள்களின் இயக்கத்திற்குஈகொடுத்தே ஆக வேண்டும்!
2. ஒரு மனிதன் ஒரு நாளைக்கு 3 வேளைஉணவு உண்கிறான்!
3. 6 லிட்டர் தண்ணீர் குடிக்கிறான்!
4. ஆனால், ஒரு நாளைக்கு 21,600 தவவைக்கும் மேலான எண்ணிக்கையில்சுவாசிக்கிறான்!!
5. எனவே, மனிதன் கோள்களின் கதிர்அலை (Ray's)கள் நிரம்பியுள்ள, காற்றினை சதா மூக்கினால் சுவாசித்தவண்ணம் இருக்கின்றான்!
6. "மனிதனை" இயக்குவது மனம்!
7. மனதினை இயக்குவது சுவாசிக்கும்காற்று!
8. காற்றினை இயக்குவது காலம்!
9. காலத்தினை இயக்குவது காலகிரகங்கள்
10. கிரகங்களை இயக்குவது"பரம்பொருள்!"
11. பரம்பொருளுக்கும், மனிதனுக்கும்இடையில் எத்தனை விதவிதமானபாலங்கள் பார்த்தீர்களா? அன்பர்களே!
ஹோரா கிரகத்தின் வலிமை நிர்ணயம்:
1. காலத்தினை வருடம், மாதம், வாரம்,ஹோரை என்று நான்கு பெரும்பிரிவுகளாக பகுக்கப்பட்டுள்ளது!
2. இதில் வருடாதிபதியின் பலம் 25% ஆகும்!
3. மாத அதிபதியின் பலம் 50%.
4. வார அதிபதியின் பலம் 75%.
5. ஹோரா அதிபதியின் பலம் 100%.
6. எனவே வருடாதிபதி, மாதாதிபதி, வாராதிபதி, ஹோராதிபதி ஆகியநால்வரில் ஹோரா அதிபதியே அதிபலம்பெற்று விளங்குகிறார்.
7. இதிலிருந்து ஹோரைதான் அதிகவலிமை பொருந்தியது என்று நாம்அறிந்து கொள்ள வேண்டும்!
வருட மாத வார ஹோரா
அதிபதி 25% அதிபதி 50% அதிபதி 75% அதிபதி 100%
8. ஹோரா கிரகம் தான் 1 மணி நேரத்தின்CM போன்றவர். அவர் வைப்பதுதான்சட்டம்!!
9. ஒரு நாள் முதல்வர் போன்று 1 மணிநேர முதல்வர் ஹோரா கிரகம் ஆவார்!
ஹோரையின் குணங்கள்; செயல்கள்:
சூரிய ஹோரைகள்: (உத்தியோகஹோரை)
அரசு தொடர்பான காரியங்களில்ஈடுபடுதல், அரசியல் தலைவர்களைசிந்தித்தல், அரசு உதவியைத் தேடல், தந்தை தொடர்பான அனைத்துவிஷயங்களும், பெரியோர்களின்ஆதரவைப் பெறுதல், சிவ வழிபாடு, அரசுபதவி ஏற்றல், பிரபலங்களின் தொடர்புகிடைத்தல், பொதுவாக சூரியஹோரையில் அரசு, தந்தை வகையிலானசெயல்களை செவ்வனே செய்யலாம்.
சந்திரன் ஹோரை: (அமுத ஹோரை)
1. சந்திரன் துரித கிரகமாகையால்பயணங்களில் விரைவும், வெற்றியும்உண்டாகும் ஹோரையாகும் இது! உணவுபொருட்கள் சம்பந்தமான செயல்கள்செய்தல், திருமண விசயம் பேசலாம்,அம்பாள் வழிபாடு செய்தல், மனம்சம்பந்தமான விஷயங்களில் ஈடுபடலாம், "கற்பனையை" மூலதனமாக கொண்டஎந்த ஒரு செயலிலும் ஈடுபடலாம்!
2. எல்லா சுப காரியங்களுக்கும் சந்திரஹோரையை தேர்ந்தெடுக்கலாம்!
3. அம்மாவசையன்றும், மறுநாள் பிரதமைஅன்றும் சந்திர ஹோரையைதவிர்க்கவும்! தேய்பிறை சந்திரஹோரையை தவிர்ப்பது நலம்!
செவ்வாய் ஹோரை: (ரோகம் தரும்ஹோரை)
1. கடன் வாங்குதல் கூடாது. கடனைதிருப்பி கொடுக்கலாம்! எந்த ஒருகாரியமும் செய்ய கூடாது. தடை, தாமதம்,விபத்து, ரணகாயங்கள் உண்டாக்கும்ஓரையாகும்! இது ஒரு காரசாரமானசண்டை கலகமூட்டும் கிரக ஒரையாகும்!
2. அனைவரும் அனைத்திலும் உஷார்! செவ்வாய் போர் கிரகம்!
3. புதிய முயற்சிகளை கட்டாயம்தவிர்க்கவும்.
புதன் ஹோரை: (லாபம் தரும் ஹோரை)
1. எழுத்து, பேச்சு, வித்தை ஆரம்பம்,கல்வி, படிப்பு, கல்வி தொடர்பானஅனைத்து காரியங்களும் இந்தஓரையில் செய்யலாம்!
2. கதை, கட்டுரை, காவியம், கவிஇயற்றுதல் நூல் ஆராய்ச்சிபோன்றன்யாவும் புதன் ஓரையில்வெற்றிகரமாக செய்யலாம்!
3. வியாபாரம், தொழில், உத்தியோகம்தொடர்பான காரியங்களில் ஈடுபடலாம்!
4. திருமணம் சம்பந்தமான காரியத்தில்துணிந்து செயல்படலாம்!
5. எல்லா சுயகாரியங்களையும் புதஓரையில் புஷ்டியாக வெற்றியாகசெய்யலாம்!
6. பழம் நழுவி பாலில் விழுந்தது போல்வெற்றி தரும் ஓரை இது!
குரு ஹோரை: (தன ஹோரை)
1. இது 100% சுப ஒரையாகும்! குருஓரையில் எல்லா வகையானசுபகாரியங்களையும் செய்யலாம்!
2. கல்வி, வித்யாரம்பம், ஆலயம்வழிபடுதல், திருமணம் செய்தல், ஆடைஆபரணம் வாங்க, அணிய சிறந்த ஓரை.
3. எல்லா விதங்களிலும் சுபத்தையும், லாபத்தையும் அளிப்பது குருஓரையாகும்!
சுக்கிரன்: (சுகம் தரும் ஓரை)
1. சங்கீதம், ஆடல், பாடல், கற்க, கவி, கட்டுரை, கதை இயற்றுதல், காதல்தொடர்பான விஷயங்களில் ஈடுபடல், பணம் வாங்குதல், கொடுத்த கடன் வசூல்செய்ய உகந்த ஓரை, பணம் கொடுக்கக்கூடாது!
2. ஆடை, ஆபரணங்கள் வாங்குதல், அணிதல், அலங்கார ஆடம்பர பொருட்கள்வாங்குதல், உல்லாச பொழுதுபோக்குஅம்சங்களில் ஈடுபடுதல், படப்பிடிப்புதொடக்க விழா (பட பூஜை) செய்தல், கலை அரங்கேற்றம், வங்கிகளில் புதியAccount ஏற்படுத்துதல், (A/c Open பண்ணுதல்).
3. வீடு, வாகனம் கிரயம் பண்ணலாம்!
4. விருந்தினராக செல்லலாம்! பெண்பார்க்க சென்றால் வெற்றி உறுதி!
5. சகல சுபகாரியங்களுக்கு 100% உகந்தஓரை சுக்கிர ஓரையாகும்!
சனி ஓரை: (சோரம் தரும் ஹோரை)
1. சனி ஓரையில் எந்த ஒரு சுபகாரியத்திலும் ஈடுபட கூடாது! மீறிசெய்தால் அக்காரியத்தில் தடை, தாமதம், தோல்விகளே ஏற்படும்! 100% அசுபம்உண்டாக்கும்!
2. கண்டங்கள், விபத்துக்கள், பிடிபடுதல், தீயவிளைவுகளை வாரி வழங்குவது சனிஓரையாகும்! பெரும்பாலான (Accident) வாகன விபத்துக்கள் சனி ஓரையில்தான்நிகழும்! உஷார்!
3. இந்த ஓரையில் ஒரு மூலையில்ஒதுங்கி உட்காருவதே சாலச்சிறந்தது!
4. Switch Off செய்யப்பட்ட மொபைல்மாதிரி ஆகிவிட வேண்டியதுதான்!
சுப ஹோரைகள்: (நைசர்க சுபர்கள்)
1. குரு
2. சுக்கிரன்
3. புதன்
4. சந்திரன்
அசுப ஹோரைகள்: (நைசர்க பாபிகள்)
1. செவ்வாய்
2. சனி
சூரியன் அசுப ஹோரை அல்ல!
கிழமைகளுக்கும் ஹோரா கிரகத்திற்கும்என்ன உறவுமுறை என்பதனைபொருத்தே ஹோரையின் செயல்பாடுகள்அமைகிறது!
ஹோரையின் நுட்பங்கள்:
கிரகங்களின் நட்புகள் (Friends)
சூரியன் = குரு, செவ்வாய், சந்திரன்
சந்திரன் = குரு, செவ்வாய், சனி
செவ்வாய் = குரு, சூரியன், சந்திரன்
புதன் = சுக்கிரன், சனி
குரு = சூரியன், சந்திரன், செவ்வாய்
சுக்கிரன் = சனி, புதன்
சனி = சுக்கிரன், புதன்
கிரக சமம் (Nutral) (No Friends)
சூரியன் = புதன்
சந்திரன் = செவ்வாய்
செவ்வாய் = சுக்கிரன்
புதன் = சூரியன்
குரு = சனி
சுக்கிரன் = செவ்வாய்
சனி = குரு
கிரக பகை விவரம்
சூரியன் x சுக்கிரன், சனி
சந்திரன் x சுக்கிரன், சனி, புதன்
செவ்வாய் x புதன், சனி
புதன் x குரு, சந்திரன், செவ்வாய்
குரு x சுக்கிரன், புதன்
சுக்கிரன் x சூரியன், சந்திரன்
சனி x செவ்வாய், சூரியன், சந்திரன்
குறிப்பு:
வாராதிபனும், ஹோராதிபனும்ஒருவருக்கொருவர் பகையாகஇருந்திடில் அந்த ஹோரை சரியாகசெயல்படாது!
உதாரணம்:
ஞாயிற்றுக்கிழமை சுக்கிர ஓரை தவறைச்செய்யும்! காரணம் சூரியனும், சுக்கிரனும்ஒருவருக்கொருவர் பகைவர்கள்.
சூ x சுக்
தோல்வி தரும் கிரக ஓரைகள்:
கிழமைகள் தோல்விகள்
ஞாயிற்றுக் கிழமை சுக்கிர ஓரைதோல்வியை
தரும்.
திங்கள் கிழமை சுக்கிரன், புதன் ஓரைகள்
சரியாக செயல்படாது.
செவ்வாய் கிழமை புதன் ஓரை தோல்விதரும்.
புதன் கிழமை குரு, சந்திர ஓரைகள்சரியாக
செயல்படாது.
குரு (வியாழன்) சுக்கிர, புதன் ஓரைகள்
கிழமை சரியாக செயல்படாது.
வெள்ளி கிழமை குரு, சந்திர ஓரைகள்
தோல்வி தரும்.
சனிக்கிழமை சந்திர ஓரை தவறை
செய்யும்! உஷார்!
கிழமைகள் ஆகாத ஓரைகள்
ஞாயிறு சுக்கிரன், சனி
திங்கள் சுக்கிரன், புதன், சனி
செவ்வாய் புதன், சனி
புதன் குரு, சந்திரன், செவ்வாய்
வியாழன் சுக்கிரன், புதன், சந்திரன்
வெள்ளி குரு, சந்திரன், சூரியன்
சனி சந்திரன், செவ்வாய், சூரியன்
புதன் கிழமை குரு ஓரை நடக்கும்போதுகுரு சுப ஓரை என்று எதையும்செய்யலாகாது! இவ்வாறு ஹோராசாஸ்திரத்தில் இன்னும் பலவிதநுணுக்கங்கள், நுட்பங்கள் உள்ளன!! இனிஅதையும் கொஞ்சம் பார்க்கலாம்!
கடுமையான பாதிப்பை தரும் கிரகஓரைகள்:
பாபகிரகங்களின் கிழமைகளில்(ஞாயிறு, செவ்வாய், சனி) பகைவர், பாபிகளின் ஓரைகள் பயங்கரமானபாதிப்புகளை தந்து விடுகிறது!
கிழமை ஓரை
ஞாயிறு x சனி
செவ்வாய் x சனி
சனி x செவ்வாய், சூரியன்
ஞாயிற்றுக்கிழமையில் வரும் சனிஓரையும், செவ்வாய் கிழமை வரும் சனிஓரியும் பொல்லாத ஒரையாகும்! இதன்கொடுமையை அனுபவித்தவரிகளிடம்தான் கேட்டறிய வேண்டும்!
சனிக்கிழமையில் சூரிய, செவ்வாய்ஓரைகள் கடுமையான பாதிப்புகளைதந்து விடுகிறது. அதிலும்சனிக்கிழமையில் செவ்வாய் ஓரை மிககடுமையாக இருக்கும்!
கண்டிப்பாக வெற்றியைத் தரும்ஹோரைகள்:
கிழமைகள் ஓரைகள்
ஞாயிறு சூரியன், புதன், குரு, சந்திரன்
திங்கள் சந்திரன், குரு, சூரியன்
செவ்வாய் குரு, சந்திரன், சுக்கிரன்,சூரியன்
புதன் சுக்கிரன், புதன், சூரியன்
வியாழன் குரு, சனி, சந்திரன், சூரியன்
வெள்ளி சுக்கிரன், புதன்
சனி குரு, சுக்கிரன், புதன்
பிறந்த ஹோரை பலன்:
1. ஒருவன் எந்த ஓரை நடக்கும்போதுபிறந்தாரோ அதுவே அவரின் ஜென்மஒரையாகும்!
2. பிறந்த ஓரை கிரகம் அவருக்குஎப்போதும் நன்மையே செய்யும்!
3. பிறப்பு ஓரை கிரகத்தின் நட்பு கிரகஓரைகளும் நன்மை செய்யும். பகை ஓரைகிரகங்கள் தீமை செய்யும்.
4. பிறந்த ஓரை கிரக சுபாவகுனம்அச்சாதகரிடத்தில் காணப்படும்.
5. ஒருவர் வெள்ளிக்கிழமை பகல் 2.30 மணிக்கு பிறந்தால் அப்போது நடக்கும்புதன் ஓரையே அவரது பிறப்புஒரையாகும். எனவே, புதன் அவருக்குசுபத்தையே செய்யும்.
சிறப்பு விதிகள்:
1. யாவருக்கும் "ஜென்மலக்னாதிபதியான" கிரகத்தின் ஓரைஎப்போதும் நன்மையே செய்யும்!
2. மேலும் இந்த லக்னாதிபதியின்ஹோரையில் எந்த செயலில்ஈடுபட்டாலும் வெற்றி உறுதி! பழம் நழுவிபாலில் விழுந்தாற்போல!
3. யோகி, இந்து லக்னாதிபதியாகவருகின்ற கிரக ஓரைகளும் சுபத்தையேசெய்யும்!
4. ஜாதகத்தில் சுபபலம், சுபசாரம் பெற்றுநல்ல நிலையில் இருக்கின்ற கிரகஓரையும் எப்போதும் சுபத்தையேசெய்யும்!
5. லக்னத்தின் 6, 18, 12, பாதகாதிபதிகள்ஓரை நன்மை செய்யாது!
6. நீச்சம், அஸ்தமனம், பகை, வக்கிரம்பெற்ற கிரக ஓரைகள் சுபத்தைசெய்யாது!
7. தசா புத்தியாக எந்த கிரகமோ! அந்தகிரகங்களின் ஹோரையில், அந்ததசாபுத்தி பலன் நடைமுறைக்குவருவதை அனுபவத்தில் காணலாம்!
8. உதாரணமாக சூரிய தசை புதன் புத்திஎனில் சூரியன் மற்றும் புதன் ஓரைகளில்பலன்களை எதிர்பார்க்கலாம்! இதுநன்மை செய்யும் தசாபுத்தி எனில்நன்மை! தீமை தரும் தசாபுத்தி எனில்அந்த கிழமை, ஓரைகளில்எச்சரிக்கையாக இருந்திடலாம்!
9. சூரிய தசா/புத்தி நடப்பவர்களுக்குசூரிய ஓரைகளில் தாம் பலன் (+/-)கள்நடக்கும்.
10. சந்திரன் தசா/புத்தி நடப்பில்உள்ளவர்களுக்கு சந்திர ஓரையில் தான்பலன்கள் நடக்கும்.
11. இதே போல மற்ற கிரகதசாபுத்திகளில் அந்த கிரக ஓரைகளில்அதன் பலன்கள் நடைமுறைக்கு வரும்!
12. ராகு தசா/புத்தியில் ராகு நின்றராசியாதிபதி கிரக ஓரையிலும் பலன்தரும்!
13. கேது தசா/புத்தியில் கேது நின்றராசியதிபதியின் கிரக ஓரையிலும் பலன்தரும்!
14. பிறப்பு ஜாதகத்தில் சூரியன், சந்திரன், ராகு, கேது சேர்க்கை பெற்றிருப்பின்சூரியன், சந்திரன் ஓரைகள் சரியாகபலன் தராது!