பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில ஒன்பது கோளும் ஒன்றாய் காண பிள்ளையார் பட்டி வர வேண்டும் அங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில் உறையும் அவரை தொழ வேண்டும்...
இப்பாடலிலே பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரின் பெருமை அடங்கியுள்ளது.
பிள்ளையார்பட்டி அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோவில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு அருகே உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களில் வசிப்பவர்களின் குல தெய்வம் மற்றும் கஷ்டம் நீக்கும் இஷ்ட தெய்வமாகப் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் விளங்குகிறார்.
கற்பக விருட்சம் என்னும் மரத்தினடியில் அமர்ந்து மனதார வேண்டினால், வேண்டுவனவற்றை எல்லாம் தருமாம் அக்கற்பக மரம்.
இங்கு வீற்றிருக்கும் கற்பக விநாயகரை வணங்கினால் கல்வி, ஞானம், திருமணம், குழந்தை பாக்கியம், குடும்ப நலம், உடல் பலம், வியாபாரச் செழிப்பு உட்பட சகல நற்பலன்களும் ஏற்படும்.
தல வரலாறு :
கயமுகா சூரனை கொன்ற பிள்ளையார் தனது பழியை போக்கிக் கொள்ள சிவபெருமானை நோக்கி தவம் செய்த இடம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு சிவபெருமானை நோக்கி தவம் செய்த வண்ணம், வடக்கு முகமாகவே பக்தர்களுக்கு விநாயகர் அருள் பாலிக்கிறார். கற்பக விநாயகர் தனது வலது கையில் ஒரு சிவலிங்க சின்னமும், இடது கரத்தை தனது வயிற்றை சுற்றியுள்ள கச்சையின் மீதும் வைத்துக் கொண்டும் அமர்ந்து இருக்கிறார். இவரது தும்பிக்கை வழஞ்சுழியாக இருக்கிறது. மற்றொரு சிறப்பம்சம் இவருக்கு முப்பரிநூல் கிடையாது. விநாயகர் சன்னதிக்கு எதிர்புறம் அமைந்துள்ள வடக்கு கோபுரவாசல் வழியாக சென்று வழிபட்ட பின்பு கிழக்கு கோபுரவாசல் வழியாக வரவேண்டும் என்பது மரபு.
விநாயகர் கோபுரத்திற்கு எதிர்புறத்தில் வெளிபிரகாரத்தின் வட திசையில் விசாலமான திருக்குளம் உள்ளது. ஒவ்வொரு சதுர்த்தியின் இரவு நேரத்தில் விநாயகர் மூசிக வாகனத்தில் எழுந்தருளி கோவில் உட்பிரகாரத்தில் வலம் வருவார். பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி பத்து நாள் திருவிழா நடைபெறுகிறது. ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா புகழ் பெற்றது. இங்கு பிள்ளையாருக்கு தனியே தேர் உள்ளது. பிள்ளையார் தேரில் இரு வடங்களில் ஒன்றை ஆண்களும், மற்றொன்றை பெண்களும் இழுத்துச் செல்வார்கள்.
நேர்த்திக்கடன் :
முக்குறுணி மோதகம் (கொழுக்கட்டை) செய்து வழிபடுவது.
தொழில் அபிவிருத்தி வேண்டுவோர் இத்தலத்தில் கணபதி ஹோமம் செய்வது நலம்.
அருகம்புல் மாலை அணிவித்து வழிபடுவது சிறப்பு.
முக்கிய திருவிழாக்கள் :
விநாயகர் சதுர்த்தி.
திருக்கார்த்திகை.
மார்கழி திருவாதிரை நாளன்று சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமான் திருவீதி பவனி வருவார்.
தமிழ் மற்றும் ஆங்கில புத்தாண்டு தினங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும