Pages

செவ்வாய்கிழமை பிரதோஷம் (ருணவிமோசன பிரதோஷம்)

செவ்வாய் கிழமை அன்று வரும் பிரதோஷம் ருண விமோசன பிரதோஷம் எனக் கூறப்படுகிறது.

செவ்வாய் கிரகம் கடன் தொல்லை தரவும் செய்யும்,தீர்க்வும்  செய்யும்.
இப்பிரதோஷம் செவ்வாய் அன்று வருவதால் இது ருண ( கடன் )  விமோசன பிரதோஷம் எனப்படுகிறது.
கடன் தொல்லையால் அவதிப்படுவோர் இந்த பிரதோஷத்தை முறையாகப் பயன் படுத்திக் கொள்ளவும்.
சித்தர்களின் ஜீவ சமாதி, 100ஆண்டுகளுக்கு மேற்பட்ட சிவாலயங்கள்,ஸ்ரீ சரபேஸ்வரர் சன்னிதி போன்ற இடங்களில் வழிபாடு செய்யலாம்.
ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்மர் வழிபாடும் இந்த பிரதோஷ  காலத்தில் சிறப்பானது.
அருணாசல கிரிவலம் மிக மிக சிறப்பு. மற்ற இடங்களிலும் கிரி வலம் செய்யலாம்.
அன்றைய தினம் மௌன விரதம் இருப்பது கூடுதல் பலன் தரும்.
கேரட் சாதம், தக்காளி சாதம், துவரை சாதம் அன்னதானம் செய்யலாம்.
அன்று ரத்ததானம் செய்யலாம்.
முருகப் பெருமான் குடி கொண்டுள்ள ஸ்தலங்களில் கிரி வலம் செய்யலாம்.
பழனி,திருச்செந்தூர், திருப்பரங்குன்றம் , கழுகு மலை சிறப்பு ஸ்தலங்கள்.
திருச்செந்தூர் செல்வோர் ஸ்ரீ சத்ரு ஸம்ஹார மூர்த்தி ஸ்வாமி ஜீவ சமாதியிலும், கழுகு மலை செல்வோர் மிளகாய்ப்பழ சித்தர் ஜீவ சமாதியிலும்,பழனியில் ஸ்ரீ போகர்  மற்றும் ஸ்ரீ ஈஸ்வர பட்டர் ஜீவ சமாதியிலும், திருப்பரங்குன்றத்தில் ஸ்ரீ  மாயாண்டி சித்தர் ஜீவ சமாதியிலும் இந்நாளில்தியானிக்கலாம்.