நமதுவீட்டில் ஒரு மந்திரத்தை வாய்விட்டு ஒரு முறை சொன்னால்,ஒரு முறை ஜபித்த பலன் கிடைக்கும்.
மனதுக்குள்=உதடு அசையாமல் ஒரு முறை ஜபித்தால்,
வீட்டில் = 10 முறையும்
பழமையான(கருங்கல்லால் கட்டப்பட்ட சிவாலயத்திலும்/விஷ்ணு/அம்மன்/எந்தக் கோவிலாக இருந்தாலும்) ஆலயத்தில் = 1000 முறையும்
மலைமீதிருக்கும் கோவிலில் = 1 கோடி முறையும்
கடலோரக்கோவிலிலும்,கடலில் இடுப்பளவு தண்ணீரிலும்= 2 கோடி முறையும்
ஜபித்த பலன்கள் நமக்குக் கிடைக்கும்.
தரையில் நின்றோ,நடந்தவாறோ இந்த மந்திரத்தை ஜபித்தால்,ஜபித்த பலன் நமக்குக் கிடைக்காது.
பூமிக்குப் போய்விடும்.
இதுவே,தமிழ் வருடப்பிறப்பு,தமிழ்மாதப்பிறப்பு,பவுர்ணமி,அமாவாசை,கிரகண நாட்களில் ஜபித்தால்,மேற்கூறிய எண்ணிக்கை பெருக்கல் 100 கோடி மடங்கு பலன்கள் நமக்குக் கிடைக்கும்.
இருந்த போதிலும்,நாம் ஜபிக்கும் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டும்போது,நமது வாழ்க்கை சிந்தனை மாறிவிடும்.
நாமே மாறிவிடுவோம்.