முருகப்பெருமானை வழிபட்டு
முருகனருள் பெற சிறந்தநாள் கார்த்திகை விரதம்.
கந்தனை எண்ணியே
வந்தனை செய்வோர்க்கு
காரியம் கைகூடுமே!
பகை மாறி உறவாடுமே!
சிவ மைந்தன் அருளாலே மெய்யறிவுண்டாகி
மேன்மை உயர்வாகுமே...!
கந்தா போற்றி..
கடம்பா போற்றி..
கார்த்திகேயா போற்றி..
கருணாகரனே போற்றி..
கதிர் வேலவனே போற்றி..
மாதாமாதம் வரும் கார்த்திகை மாதக்கார்த்திகை அல்லது கிருத்திகை விரதம் எனப்படும். கார்த்திகை மாதத்தில் வரும் பெரிய கார்த்திகை மற்றும் கார்த்திகை தீபவிழா எனப்படும்.
கார்த்திகை பெண்கள் கந்தனை
பாலூட்டி வளர்த்த காரணத்தால்
அவர்கள் 6 பேரும் கந்தனுக்கு தாய்
என்ற சிறப்பினைப் பெற்றனர். அப்போது சிவபெருமான் கார்த்திகை பெண்களை பார்த்து நீங்கள் எம் குமாரனை பாலூட்டி வளர்த்த காரணத்தால் இன்று முதல் உங்கள் பெயரிலேயே முருகன் கார்த்திகேயன் என்ற பெயர் பெறுவான் என்றும்....
அது மட்டுமல்ல... உங்களின் நாளாகிய இன்றைய கார்த்திகை நட்சத்திரத்தன்று விரதமிருந்து முருகனை வழிபடுவோர் இன்னல்கள் அனைத்தும் நீங்கி வாழ்வில் சகல செல்வங்களும் பெற்று வாழ்வார்கள் என்று கூறி ஆசிர்வதித்தார்.
அவ்வாறே இன்றும் முருகபக்தர்கள்
யாவரும் கார்த்திகை விரதம் இருந்து முருகனின் பேரருளைப் பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது...
இன்றைய நாளில் விரதமிருப்பவர்கள் தண்ணீர் மட்டும் அருந்தி முருக மந்திரங்கள், முருகன் துதிகளை பாராயணம் செய்து தியானம் செய்து கோவில் வழிபாடு இவைகளை செய்தல் வேண்டும்.
மேலும் இரவில் நித்திரை செய்யாமல் விழித்திருந்து கந்த மந்திரங்களை ஜெபித்து மறுநாள் ரோகிணியன்று காலையில் மீண்டும் நீராடி நித்திய வழிபாடுகளை புரிந்து கந்தன் அடியார்களுக்கு அன்ன தானம் செய்து ஆலயங்களில் நடைபெறும் அபிஷேக ஆராதனைகள், பூஜைகள் மற்றும் அர்ச்சனைகளிலும் பங்கு கொண்டால் முருகன் அருள் பெறலாம்.
மேலும் மற்ற நட்சத்திரங்களுடன்
ஒப்பிடும் போது அவையனைத்தும்
ஒன்று, இரண்டு, மூன்று அல்லது நான்கு நட்சத்திரங்களுடைய கூட்டமாகும்.
ஆனால் இன்றைய கார்த்திகையில் மட்டும் நட்சத்திரங்கள் தாராளமாக இருப்பதால் அந்த நட்சத்திரத்தில் தானம் செய்யும் பக்தரும் அவரது வம்ச பரம்பரையினர்களும் அளவற்ற நன்மைகளை அடைந்து சுகபோக வாழ்க்கையினை பெறுவர் என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கை.
'காக்க காக்க' 'கனகவேல் காக்க '
என்று தமது வாழ்க்கையை கந்தனிடம் ஒப்படைத்தபிறகு நாளை வாழ்வில் என்ன நடக்கும் என்று யோசித்து பயந்து கொண்டே இருந்தால் உங்களது பக்தி என்பது வெறும் வாயால் வருவது மட்டுமே.
மனதார பக்தி செய்பவன் நாளைய
வாழ்வை நினைத்து கவலைபட மாட்டான்
ஏன் என்றால் அனைத்தையும் முருகனிடம் ஒப்படைத்தவனுக்கு பயமென்பதே இருக்காது. வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை முருகன் நம்முடன் இருக்க எந்த குறையுமில்லை.
முருகனை வணங்கி அருள்பெருவோம்.
ஓம் உமையவள் மகனே போற்றி..!
ஓம் ஐயனே போற்றி அருளே போற்றி..!ஓம் ஐங்கரன் தம்பியே போற்றி..!